Skip to main content

நீதிமன்றத்திலிருந்து இலக்கியத்திற்கு: வீர்சிங் மரண மர்மம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது

  புத்தகம்

            


1925 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு காலை, Taiping நகரிலுள்ள போலீஸ் நீதிமன்றத்தில் வழக்கமான அமைதி அங்கு காணப்படவில்லை. பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த வீர்சிங் என்ற ஆடவரின் மரணம் குறித்து சாட்சிகள் ஒருவருக்கொருவர் அழைக்கப்பட்டு சாட்சியம் அளித்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முயன்றனர். நீதிமன்றம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

 

அந்த வழக்கு பின்னர் 1925 செப்டம்பர் மாதத்தில் Ipoh நகரிலுள்ள பேராக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. பல நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு சாட்சியங்களும் சாத்தியங்களும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் வரலாற்றில் உள்ள பல சம்பவங்களைப் போல சில கேள்விகள் இன்னும் மர்மமாகவே இருக்கலாம்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த நிகழ்வு மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது—இந்த முறை இலக்கிய வடிவில்.

 

1992 முதல் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்  உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB), இந்தக் கொலை மர்மத்தை தனது புதிய சிறுகதைத் தொகுப்பான Siapa Bunuh Veer Singh? (“வீர் சிங்கைக் கொன்றது யார்?”) என்ற நூலில் மீண்டும் எடுத்துரைக்கிறார்.

 

இந்தத் தொகுப்பில் 2025 தொடக்கம் 2026 தொடக்கம் வரை எழுதப்பட்ட 17 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இது எழுத்தாளரின் முந்தைய சிறுகதைத் தொகுப்பான Sebelas Amanat Swamiji (2025)யின் தொடர்ச்சியாகும்.

 

நூலின் தலைப்பு கதையாக இருக்கும் இந்தச் சிறுகதை 1925 ஆம் ஆண்டில் நடைபெற்ற விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஆவண காப்பகப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வரலாற்று கற்பனை அணுகுமுறையின் மூலம் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதிவான உண்மைகளையும் படைப்பாற்றல் கற்பனையையும் இணைத்து நிகழ்வின் கதையை மறுபடியும் உருவாக்கியுள்ளார் உதயசங்கர் எஸ்பி.

 

இந்தக் கதை இரண்டு முக்கிய பகுதிகளாக அமைந்துள்ளது — விசாரணை (inquest) மற்றும் நீதிமன்ற வழக்கு (trial). இந்த அமைப்பு காலனித்துவ கால சட்ட அமைப்பில் வழக்கு எவ்வாறு முன்னேறியது என்பதை வாசகர்கள் பின்தொடர அனுமதிக்கிறது.

 

சமூக வரலாற்றில் தனக்குள்ள ஆர்வமும், ஒரு சம்பவம் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதையும் பற்றிய ஆர்வமும் இந்தக் கதைக்கான எண்ணத்தை உருவாக்கியது என்று கூறுகின்றார் எழுத்தாரும் நண்பருமான திரு.  உதயசங்கர்.

 

“நீதிமன்ற ஆவணங்களும் செய்தி அறிக்கைகளும் உண்மைகளை பதிவு செய்கின்றன. ஆனால் அதன் பின்னால் இருக்கும் மனிதர்களின் முழு கதையை அவை அடிக்கடி சொல்லாது. கற்பனை இலக்கியம் அந்த உணர்வுகள், மோதல்கள் மற்றும் நோக்கங்களை ஆராய இடமளிக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

 

நூலாக வெளியாவதற்கு முன்பு வீர்சிங் சம்பவத்தை சார்ந்த கதை 2024 ஆம் ஆண்டு Sastera Kavyan என்ற இலக்கிய இணையதளத்தில் தொடர் வடிவில் வெளியானது. பின்னர் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தென்றல் இதழில் வெளியிடப்பட்டது.

 


இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “டான் சாய் ஹோயியை கொன்றது யார்?” என்ற சிறுகதை, 1958 ஆம் ஆண்டு Penang இல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கைச் சார்ந்த பல செய்தி அறிக்கைகளையும் காப்பக ஆவணங்களையும் சேகரித்து ஆய்வு செய்த பிறகு எழுதப்பட்டது.

 

வீர்சிங் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கதைக்குப் பிறகு ‘உண்மை சம்பவங்களை’ அடிப்படையாகக் கொண்டு எழுதும் தனது ஆர்வத்தைத் தொடர முயன்றார் உதயசங்கர். ஆனால், டான் சாய் ஹோயி சம்பவம் குறித்து கிடைத்த தகவல்கள் குறைவாக இருந்ததால், அந்தக் கதை அதிகமாக கற்பனைச் சேர்க்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

இந்தத் தொகுப்பில் உள்ள பிற கதைகள் மலேசியாவின் பல இன மக்களின் கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் சமூக அனுபவங்களை பிரதிபலிக்கின்றன.




 Maklumat Buku

Judul : Siapa Bunuh Veer Singh?

ISBN : 978-629-95971-1-7

Kategori : Fiksyen (Cerpen)

Penulis : Uthaya Sankar SB

Penerbit : Uthaya Sankar SB

Tahun : 2026 (April)

(புத்தகத்தை பெற விரும்புவர்கள் கீழ்கண்ட இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்)

https://uthayasb.blogspot.com/2026/01/cerpen2026.html

Comments

Popular posts from this blog

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...

PENGECUT

  Cerpen    Oleh: M. Mahendran       “Kita perlu menolong mereka. Mereka dalam kesusahan. Tanpa ditolong, mereka tidak dapat makan.” “Kita tinggal jauh. Biarlah mereka yang tinggal berdekatan menolong.” “Jangan peduli tentang negara yang berdekatan. Mereka di seberang lautan ialah saudara kita. Kita harus menolong mereka.” “Tanpa pertolongan kita, adakah mereka akan mati kebuluran?” “Ya. Jadi hulurkanlah bantuan.” “Bagaimana cara membantu mereka?” “Kita perlu merentasi lautan.” “Tidak bolehkah dengan mengirim wang sahaja?” “Itu tidak cukup. Kita perlu pergi sendiri untuk menghulurkan makanan, pakaian dan bantuan kesihatan. Ini perlu dilakukan sendiri. Barulah kita akan rasa puas dan mereka pun akan gembira.” “Tidak bahayakah merentas lautan?” “Demi menolong saudara kita di situ, apa pun tidak bahaya.” “Jadi, kamu akan ke sana merentas lautan dengan kapal walaupun kamu tidak pernah pergi sebelum ini?” “Kamu boleh ikut kami. Dengan berbuat demikian, kamu akan...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...