சிறுகதை
எம். பிரபு
தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்தக் கொலையைச் செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை.
இந்தச் சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பிணத்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது.
இது அவனுக்கு இரண்டாவது முறை. இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது.
இப்போது நடத்தப்பட்ட கொலை, அவனுக்கு கடினமானது. இந்த கொலைதான் அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.
சங்கடமானதும் கூட.
இந்த வீடமைப்பு பகுதியில் எங்கும் புதைக்கும் அளவிற்கு நிலம் இருப்பதாக அவனுக்குப் படவில்லை.
கடினம்.
வருத்தம்.
இப்போது அவன் வருத்தப் படுகின்றான். அவனால் அவனையே கட்டுப் படுத்த இயலவில்லை. அவனுக்கும் கார் வசதியில்லை. மோட்டார் சைக்கிளில் கொண்டு போவதா, அல்லது இங்கேயே விட்டுச் சென்று விடலாமா? அப்படி செய்ய மனசு வரவில்லை. அப்படி செய்ய அவனால் முடியாது.
முடியாது!
யோசிக்கின்றான். யோசிக்கின்றான்.
* * *
கொலை செய்வது அவனுக்கு கை வந்தக் கலை. அதற்கு அவனுள் தனித் திறமையே உண்டு என நம்புகிறவன் அவன். எல்லோராலும் ஒரு கொலையைச் சர்வ சாதாரணமாக செய்து விட முடியாது. தன் தனித் திறமையை சிறு பிராயத்தில் இருந்தே நன்கு வளர்த்துக் கொண்டான்.
அது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. என்ன ஒன்று, தன் தனித் திறமையை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ள இயலாது. மேலும், தனது திறமையை இனி வருபவர்களுக்குச் சொல்லி கொடுக்கவும் இயலாது. அது அவ்வளவு சுலபமானது அல்ல. எல்லோரும் அவனைப் போன்று திறமைசாலியும் இல்லை.
ஒரு மனிதப் பிறவியை கொல்வதற்கு முன்னாள் அவன் நிறைய பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. அது தன் அம்மா வளர்த்த கோழிக் குஞ்சுகளிலிருந்து ஆரம்பமானது. அப்போது அவனுக்கு வயது ஐந்துதான். அதுகளை அவன் கற்களால் அடித்தான். ரத்தம் கொட்டின, மயங்கின. இறுதியில் செத்தே பொயின. அவன் அந்த ஐந்து வயதில் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். அவனுள் என்ன ஆனந்தம், சந்தோசம். அப்போது எதற்கு அடித்துக் கொன்றான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், சந்தோசப் பட்டான்.
சந்தோசப்பட்டான்.
அவனுக்கு எங்கே தெரிந்த்திருக்கப் போகுது அந்த குஞ்சுகள் வலியால் எவ்வளவு துடித்திருக்கும் என்று. அவனுக்கு எங்கே தெரிந்திருக்கும் தாய்க் கோழி எவ்வளவு துயரத்திற்கு ஆளாகியிருக்கும் என்று.
அவனுடைய குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். தான் துன்புறுத்திய ஜீவன்கள் சாக வேண்டும்.
சாக வேண்டும்!
அதுதான். அதனால் அவனுக்கு ஏற்படும் சந்தோசம், அலாதிதான்.
அம்மா பெரிதாக கண்டு கடிந்துக் கொள்ளவில்லை. அடிக்கவுமில்லை. இது அவனுக்கு சாதகமானது.
கோழிக் குஞ்சுகளைத் தவிர்து எறும்பு, பாச்சை, கொசு, வெட்டுக்கிளி, தட்டான், பல்லி, பறவை, எலி, மண்புழு, தவளை மற்றும் பல அவன் கண்களிலிருந்து தப்பவே முடியாது.
சிறிய உயிரினங்களைக் கொன்று சலித்த பிறகு, சற்று பெரிய மிருகங்களைக் கொல்ல ஆரம்பித்தான்.
ஒன்பது வயதிருக்கும் போது பக்கத்து வீட்டுப் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த பூனை அவன் கண்ணத்தை அதன் நகங்களால் பதம் பார்த்தது. ரத்தம் வந்தது. சொல்லவா வேண்டும். ஆத்திரம் மண்டைக்கு மேல் தாண்டவமாடியது. யோசிக்க அவகாசம் கொடுக்காமல், சமயல் அறை பின்னால் இருந்த சுத்தியலை எடுத்தான். இரு கால்களால் அந்தப் பூனையை இறுகிக் கொண்டு ஆறு தடவை அதன் மண்டையிலேயே போட்டான்.
அலறித் துடித்தப் பூனை பின் அமைதியானது. செத்துப் போன பூனையைப் பார்த்து மிகவும் சந்தோசப் பட்டான். மிகவும் சந்தோசம். அவ்வளவு சந்தோசம்.
அவனது இந்த செயலைக் கண்டு அவனது பெற்றோர் மீண்டும் கண்டிக்கவே இல்லை. அவன் கொன்ற பூனை, அவனது பெற்றோரின் எதிரி வீட்டுப் பூனை. பின் கேட்கவா வேண்டும். போதாக் குறைக்கு அவனது தந்தை அவனை வெகுவாக பாராட்டினார். முடிந்தால் அவர்கள் வளர்க்கும் எதையும் விட்டு வைக்க வேண்டாம் என்றார்.
வயது பத்திலிருந்து பன்னிரண்டு வரையில் மூன்று பாம்புகள் மற்றும் பல உடும்புகளை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தான். உடும்பு அவர்களின் வீட்டுச் சமையலுக்கு உதவின. வீட்டுச் செலவு இதனால் கொஞ்சம் குறைந்தன. பையன் துடுக்காக இருந்தாலும் இந்தச் சின்ன வயசிலேயே வீட்டிற்கு இவ்வாறு உதவி செய்வது பெற்றோருக்கு மகிழ்ச்சியளித்தன. அவர்களுடைய பாராட்டு, மேலும் அவனை தூண்டியது. அதன் பிறகு அந்த கிராமத்தில் வசிப்பவர்களின் கோழி மற்றும் ஆடுகள் மாயமாய் மறைந்தன.
எத்தனை நாளைக்குத்தான் இந்தத் திருட்டு நீடிக்கும். கிராமத்து மக்கள் அவன் குடும்பத்தையே அடித்து துரத்தினர். அங்கு பிடித்த ஓட்டம் ...
பால் மரம் சீவிக் கொண்டிருந்த அவன் அப்பாவிற்கு பட்டணத்தில், கிராமம் போன்று இலகுவான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவில்லை.
புதிய இடத்தில் எதையும் சாகடிக்காமல் அவனது வாழ்க்கை கடினமாக நகர்ந்தது. வெறும் கொசுக்களை மட்டும் கொன்று எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்று கவலைப் பட்டான். சிறிதுகாலம் விரதம் பூண்டான்.
இடைநிலைப் பள்ளிக்குச் சென்றான். இரண்டாம் படிவம் பயிலும் போது ஒரு அழகிய மாணவி ...
முழுக் கதையை தொடர்ந்து வாசிக்க எனது ‘தலைவர்’ சிறுகதைத் தொகுப்பை வாங்கிப்படிக்க மறவாதீர்கள்.
புத்தகத்தின் விலை RM18 மட்டுமே (தபால் செலவு உட்பட)
தொடர்பு எண்கள் : 016 9612085



Comments
Post a Comment