சிறுகதை எம். பிரபு தூரத்திலிருந்து பார்த்தபோது , ஒரு புல்டோசர் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருக்க , மக்கள் கூட்டம் அந்த மலைப் பகுதியை சூழ்ந்துக் கொண்டனர். ஒரே சத்தமும் அமர்க்களமுமாக இருந்தது. கீழிருந்த எனக்கே என் செவிட்டுக் காதுகளுக்கு நன்றாகக் கேட்டது. நானும் இந்தத் தள்ளாத வயதில் கம்பை ஊன்றிக்கொண்டு அந்த மலைப் பகுதிக்கு கால் வலியோடு நடந்துச் சென்றேன். பலகையினாலும் செங்கற்களினாலும் செதுக்கப்பட்ட கட்டிடம் பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. இந்தப் பழைய கட்டிடம் சற்று நேரத்திற்கெல்லாம் இடிக்கப்பட்டுவிடும். ஆம் , இடிக்கப்பட்டுவிடும். இங்கு இந்த மலைப் பகுதியில் கட்டிடம் கட்டப்பட்ட இடம் உண்மையில் எங்கள் கம்பத்து மக்களுக்குச் சொந்தமானது அல்ல என்று கட்டிடத்தை இடிக்க வந்தவர்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். எங்களது கம்பத்து மக்களும் விடுவதாக இல்லை. ஆளாளுக்கு கையில் கிடைத்ததை அவர்கள் மீது வீசினர். இடிக்க வந்தவர்களும் அதையே செய்தனர். இடை இடையே கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு. நல்ல வேளை , போலிஸ் அனைவரையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பல ஆண்டுகளாக எங்களுக்கு நோட்ட...
கட்டுரை எம். பிரபு மனிதனாக இந்த பூமியில் பிறந்து விட்டோம். பலவித இனங்களாக, மதங்களாக பற்பல நாடுகளில்-கண்டங்களில் பலவித பரிணாமங்கள் எடுத்து, இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப மனித ரூபத்தில் காட்சியளிக்கின்றோம். மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் சுகபோக வாழ்க்கை அமைந்து விடாது. யாவரும் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து அனுபவித்தே இந்த பூமியில் வாழ்ந்து பிறகு மடிந்து போகின்றனர்/வோம். இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. மனிதனுக்கு அடிப்படைத் தேவை-உணவு, நீர், உடை, இருக்க இடம், கல்வி, நோய் இல்லா வாழ்வு, அரவணைக்க உற்றார் உறவினர் மற்றும் நல்ல நண்பர்கள். இவை இருந்தால்தான் வாழ்க்கை சிறந்து விளங்கும். ஆனால் இந்த அடிப்படை தேவைகள் கூட இல்லாத மனிதர்களும் இன்னமும் இவ்வுலகில் பெருமளவில் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதை அறிந்தும் அறியாதது போன்று வேறு பகுதியில் மனித இனம் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது. இது இயற்கையே. சொந்த வாழ்க்கையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் போது பிறநாட்டு பிரச்சனைகளை நம்...