புத்தகம் 1925 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு காலை, Taiping நகரிலுள்ள போலீஸ் நீதிமன்றத்தில் வழக்கமான அமைதி அங்கு காணப்படவில்லை. பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த வீர்சிங் என்ற ஆடவரின் மரணம் குறித்து சாட்சிகள் ஒருவருக்கொருவர் அழைக்கப்பட்டு சாட்சியம் அளித்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முயன்றனர். நீதிமன்றம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அந்த வழக்கு பின்னர் 1925 செப்டம்பர் மாதத்தில் Ipoh நகரிலுள்ள பேராக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது . பல நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு சாட்சியங்களும் சாத்தியங்களும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் வரலாற்றில் உள்ள பல சம்பவங்களைப் போல சில கேள்விகள் இன்னும் மர்மமாகவே இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த நிகழ்வு மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது—இந்த முறை இலக்கிய வடிவில். 1992 முதல் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB), இந்தக் கொலை மர்மத்தை தனது பு...
சிறுகதை எம். பிரபு “ கிருஷ்ணா , கடையை கொஞ்சம் பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்!” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , அரிசி ரெண்டு கிலோ கட்டி வை!” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , இந்த பொருட்களோட விலையெல்லாம் கணக்கு செய்து வை!” அப்போதும் கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , எனக்கு உடம்புக்கு முடியல. சாமான் எல்லாம் கட்டி வை. ” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. தந்தை ஒரு வருடத்தில் இறந்தும் போனார். அப்போதுதான் கிருஷ்ணனுக்கு பயம் வந்தது. எப்படி தன்னையும் , தன் தம்பி தங்கைகளையும் காப்பாற்றி க் கொள்ளப் போகிறோம் என்கிற பயம். அவன் தலை மேல் பெரும் பாரம். கித்தா மரம் வெட்டுவதா ? அது அவனுக்குப் பிடிக்காதே. அதில் பயிற்சியும் இல்லை. தொழிற்சாலையில் வேலை செய்வதா ? தோட்டத்தை விட்டு வெகு தொலைவு போக வேண்டும். இறுதியாக அப்பாவுடைய இந்த மளிகைக் கடையை தொடர்ந்து வழி நடத்துவதுதான் சரியெனப்பட்டது. வேறு வழி இல்லை. அப்பாவுடைய ஒரே சொத்து. சொந்தக்காரர்களை எதிர்ப்பார்க்கலாம் என்றால் , அவர்கள் தன் பெற்றோரை பகைத்துக் கொண்டவர்களாயிற்றே. ஏத...