Skip to main content

Posts

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...
Recent posts

கொங் ஹீ ஃபட் ச்சோய்

 சிறுகதை எம். பிரபு     “ வாடா போலாம்!” புத்தாண்டு , சீனப் புத்தாண்டு , அதன் பிறகு தமிழ்ப் புத்தாண்டு. இந்தப் புத்தாண்டுகளெல்லாம் எந்தெந்த மாதங்களில் வரும் என்று தெரியும் – ஆனால் முஹராம் மட்டும் வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டே இருக்கும். நோன்புப் பெருநாளும் அப்படியே. நாளைக்கு மீண்டும் சீனப் புத்தாண்டு. நானும் பார்த்திபனும் ஒரே புதுமுக வகுப்பில்தான் பயில்கிறோம். இருவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து நெருங்கிய நண்பர்கள். பக்கத்து வீடு வேறு. எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் போவோம் , வருவோம். சமயங்களில் சண்டையிட்டுக் கொள்வதுமுண்டு. அன்றுதான் நாங்கள் இடைநிலைப் பள்ளியில் கால் பதித்த தினம். அப்பா என்னுடன் ஒன்றாம் வகுப்பின் முதல் நாளன்று வந்தது போன்று இங்கேயும் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பஸ் நிலையம் வரை மட்டும் வந்து ஏற்றி விட்டுச் சென்றுவிட்டார். நான் பெரிய பையனாகிவிட்டேனாம் ; இன்னும் சின்னப்பாப்பா இல்லையாம். பார்த்திபனை அவன் அப்பா சைக்கிளில் கொண்டு வந்து விட்டார். எனக்கு கொஞ்சம் பயம். பஸ் முழுவதும் சீன மாணவர்களும் மலாய் மாணவர்களுமாகவே இருந்தனர். மூன்று இந்திய மாணவிகள் மட்டும...

தேசிய மொழியில் சிறந்து விளங்க வழிமுறைகள்

  கட்டுரை       எம். பிரபு   நமது நாட்டில் இந்திய மாணவர்கள் பல மொழிசார்ந்த கல்வியை அவசியமாகப் பயில வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எந்த வகையான மொழிசார்ந்த பள்ளிக்கூடத்திற்கும் பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப பிள்ளைகளை அனுப்பலாம். தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதே சிறந்தது என்பதே அனைவரது விருப்பமாக இருந்தாலும் , அது நடைமுறையில் எப்போதும் சாத்தியமானதாக இருப்பதில்லை. மூலைக்கு மூலை மற்ற மொழிப் பள்ளிகள் இருப்பது போல் தமிழ்ப் பள்ளிகளும் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒருவருக்குத் தன் தாய் மொழி எவ்வளவு முக்கியமோ , அதேபோல் தமது தேசிய மொழியும் இந்நாட்டில் மிக முக்கியமானதாகும். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரு குடிமகனுக்கு , தன் நாட்டின் மொழியைச் சரிவர பேசவும் எழுதவும் தெரியாவிட்டால் , அதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு மாணவர் எந்தப் பள்ளியில் பயின்றாலும் , அவன் அல்லது அவள் நிச்சயமாக தேசிய மொழியில் எழுதவும் பேசவும் புலமை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ பிறந்த ஒரு குழந்தை அங்குள்ள ஆங்கில மொழியைத்தான் தன் முதன்மையான மொ...