சிறுகதை எம். பிரபு கவினுக்கு கடையில் சாப்பிடுவது அவ்வளவாகவே பிடிக்காது . அதற்கு கடைகளின் உணவின் தரமோ அல்லது தூய்மையின்மை முதன்மை காராணம் அல்ல. அதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், அதிமுக்கிய காரணம் விலைவாசிதான். ஆடிக்கு ஒரு தடவை அல்லது அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் கடையில் சாப்பிடுவான். அவன் வேலை செய்யும் பேரங்காடியின் கிடங்கிற்கு மதிய உணவை வீட்டிலிருந்தே கொண்டு வந்து விடுவான். பெரும்பாலும் நண்பன் கார்த்திக் அழைத்தால் மட்டுமே அவனுடன் கடையில் சாப்பிடுவான். அதுவும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான். இந்தப் பெரிய நகரத்தில் சிக்கனம் பிடித்தால்த்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். நண்பன் கார்த்திக் கடைக்கு அழைத்தான் என்றால் பெரும்பாலும் அவனே உணவுக்கான பணத்தை செலுத்தி விடுவான். கவின் எதுவும் கவலைப்ப்டத் தேவை இல்லை. சமயங்களில் இவனும் பணத்தைக் கட்டுவதுண்டு. என்ன ஒன்று, கடைக்குச் சென்றால் கார்த்திக் அறு அறுவென்று அறுப்பான். இன்று ஞாயிற்றுக்கிழமை, கார்த்திக் கவினை தன் காரில் ஏற்றிக் கொண்டு ஒரு சீன கோப்பிக் கடைக்குச் ச...
M. MAHENDRAN@ எம். பிரபு, பெந்தோங்