கட்டுரை
எம். பிரபு
மனிதனாக இந்த பூமியில் பிறந்து விட்டோம். பலவித இனங்களாக, மதங்களாக பற்பல நாடுகளில்-கண்டங்களில் பலவித பரிணாமங்கள் எடுத்து, இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப மனித ரூபத்தில் காட்சியளிக்கின்றோம்.
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் சுகபோக வாழ்க்கை அமைந்து விடாது. யாவரும் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து அனுபவித்தே இந்த பூமியில் வாழ்ந்து பிறகு மடிந்து போகின்றனர்/வோம். இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
மனிதனுக்கு அடிப்படைத் தேவை-உணவு, நீர், உடை, இருக்க இடம், கல்வி, நோய் இல்லா வாழ்வு, அரவணைக்க உற்றார் உறவினர் மற்றும் நல்ல நண்பர்கள். இவை இருந்தால்தான் வாழ்க்கை சிறந்து விளங்கும். ஆனால் இந்த அடிப்படை தேவைகள் கூட இல்லாத மனிதர்களும் இன்னமும் இவ்வுலகில் பெருமளவில் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதை அறிந்தும் அறியாதது போன்று வேறு பகுதியில் மனித இனம் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது. இது இயற்கையே. சொந்த வாழ்க்கையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் போது பிறநாட்டு பிரச்சனைகளை நம் தலையில் தாங்கிக் கொள்ளும் சக்தி நம்மிடம் இல்லை.
யாரும் சரிசமமாக எங்கும் வாழ்ந்திடவில்லை. ஏற்றத் தாழ்வு இருந்தால்தான் வாழ்க்கை ருசிப்படும். நேர் பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணம் போர் அடித்து விடுமல்லவா.
என்னதான் மனிதனை கடவுள் படைத்தான் என்று கருதப்பட்டாலும், மனிதன் இல்லாவிடில் கடவுள் என்ற ஒன்று இல்லாமல் போயிருக்கும். கடவுளும் மனிதனும் இப்புவியை இத்தனை கோடி ஆண்டுகளாக இயங்கச் செய்துள்ளனர். நல்லதோ கெட்டதோ, அனைத்து சம்பவங்களும் மனிதனுக்கும் கடவுளுக்கும் சம பங்குண்டு.
கடவுள் இருப்பதாகத் தோன்றினாலும் பல சமயம் இல்லாதது போன்றும் நமக்கு தோன்றும். கடவுள் இல்லாது போன்று தோன்றினால்தான் கடவுளைப் பற்றிய சிந்தனை மனிதனுக்கு அதிகம் உண்டாகும்.
ஒரு மனிதன் சிறந்த மனிதனாக ஆக முடியாவிட்டாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் வாழ்ந்து விட்டுப் போவதே சிறப்பாகும்.
உதாரணத்திற்கு, நம் நாட்டு இலக்கியவாதி திரு. A. Samad Said தனது படைப்புகளில்—குறிப்பாக Hujan Pagi நாவல் மூலம் தனது வாசகர்களுக்கு மனிதனைப் பற்றி ஆழமான செய்தியை வழங்கியுள்ளார்.
மனிதன் எந்த சூழலிலும் உண்மை (truth) மற்றும் நெறி (principles)யை விடக்கூடாது. வாழ்க்கையில் பணம், அதிகாரம், அரசியல் அழுத்தம் போன்றவை வந்தாலும், மனச்சாட்சி முக்கியம் என்பதையே அவர் வலியுறுத்துகிறார். உண்மையைப் பேசுவது சுலபமல்ல, ஆனால் அதுவே மனிதனின் மதிப்பை நிர்ணயிக்கிறது.
மனித வாழ்க்கை மாற்றங்களால் நிரம்பியுள்ளது; ஆனால் அந்த மாற்றங்களை சமாளிக்கும்போது மனிதநேயம் மறக்கப்படக்கூடாது. சமூகப் பொறுப்பு, அன்பு, மனித உணர்வு ஆகியவை இல்லாத முன்னேற்றம் வெறும் வெற்றியாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
“உண்மை, மனிதநேயம், பொறுப்பு—இவை இல்லாமல் வாழும் வாழ்க்கை முழுமையானதல்ல” என்பதே A. Samad Said தனது வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் முக்கியச் செய்தி.
அதேபோன்று Tunku Abdul Rahman மற்றும் Lee Kuan Yew இருவரும் மனித உறவுகள் மற்றும் சமூக ஒற்றுமை பற்றி வலுவான கருத்துகளை கொண்டிருந்தனர்.
Tunku Abdul Rahman அவர்கள் மனிதர்கள் இன, மத, மொழி வேறுபாடுகளை விட “நாம் அனைவரும் ஒரே மனிதர்கள், ஒரே நாட்டின் மக்கள்” என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரின் கருத்தில், அன்பு, புரிதல் மற்றும் ஒற்றுமை இருந்தால் மட்டுமே ஒரு நாடு அமைதியாக வளர முடியும்.
அதேபோல் Lee Kuan Yew அவர்கள் மனித உறவுகளில் ஒழுக்கம், கடுமையான உழைப்பு மற்றும் தேசிய ஒற்றுமையை முக்கியமாகக் கண்டார். அவர் பல இன மக்கள் ஒரே அடையாளத்தில் இணைந்து, கல்வி மற்றும் முன்னேற்றத்தின் மூலம் நாட்டை வளர்க்க வேண்டும் என்று கூறினார். இருவரின் கருத்துகளும் வேறுபட்ட முறையில் இருந்தாலும், அடிப்படை நோக்கம் ஒன்றே—மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து, ஒற்றுமையுடன் வாழ்ந்தால் சமூகம் வலுவாகவும் முன்னேற்றமாகவும் இருக்கும் என்பதாகும்.
பல சான்றோர்கள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று எடுத்துரைத்துவிட்டுச் சென்றாலும், மனிதாகிய நாம்தான் அவ்வாறு வழிநடத்திச் செல்ல வேண்டும். தடம்மாறிச் செல்லும் போதுதான் பற்பல பிரச்சனைகள் எழுகின்றின.
பிரச்சனைகள் எழலாம் ஆனால் அவற்றை சுமுகமாக தீர்ப்பது நம் கையில்தான் உள்ளது. கடவுள் வந்து தீர்த்து வைக்கமாட்டார்.
நல்லதோ கெட்டதோ எல்லாம் நமது கையில்.

Comments
Post a Comment