சிறுகதை
எம். பிரபு
“கிருஷ்ணா, கடையை கொஞ்சம் பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்!”
கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.
“கிருஷ்ணா, அரிசி ரெண்டு கிலோ கட்டி வை!”
கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.
“கிருஷ்ணா, இந்த பொருட்களோட விலையெல்லாம் கணக்கு செய்து வை!”
அப்போதும் கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.
“கிருஷ்ணா, எனக்கு உடம்புக்கு முடியல. சாமான் எல்லாம் கட்டி வை.”
கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.
தந்தை ஒரு வருடத்தில் இறந்தும் போனார். அப்போதுதான் கிருஷ்ணனுக்கு பயம் வந்தது. எப்படி தன்னையும், தன் தம்பி தங்கைகளையும் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்கிற பயம். அவன் தலை மேல் பெரும் பாரம்.
கித்தா மரம் வெட்டுவதா? அது அவனுக்குப் பிடிக்காதே. அதில் பயிற்சியும் இல்லை. தொழிற்சாலையில் வேலை செய்வதா? தோட்டத்தை விட்டு வெகு தொலைவு போக வேண்டும்.
இறுதியாக அப்பாவுடைய இந்த மளிகைக் கடையை தொடர்ந்து வழி நடத்துவதுதான் சரியெனப்பட்டது. வேறு வழி இல்லை. அப்பாவுடைய ஒரே சொத்து.
சொந்தக்காரர்களை எதிர்ப்பார்க்கலாம் என்றால், அவர்கள் தன் பெற்றோரை பகைத்துக் கொண்டவர்களாயிற்றே. ஏதோ சாதி பிரச்சனையாம்.
“வியாபாரம் செய்வது உன் ஓவியங்களை தீட்டுவது போலத்தான். முதல்ல சிரமமாத்தான் இருக்கும். ஆனால், வரைந்து முடித்தப் பிறகு உன் மனசு எவ்வளவு மகிழ்ச்சியடையுது. உன்னால் நிச்சயம் வியாபாரம் செய்ய முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு, கிருஷ்ணா. புரியுதா?”
கிருஷ்ணன் அப்போது ஏதும் விளங்காமல் தலையசைத்தான்.
கிருஷ்ணன் இப்போது ஏதாவது செய்தே ஆக வேண்டும்.
அவனுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஒரு மனிலா அட்டையை எடுத்து மார்க்கர் பேனாவால் அழகாக எழுதத் தொடங்கினான்.
‘அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு, வணக்கம். வரும் திங்கட்கிழமை மீண்டும் கடை திறக்கப்படும். பொருட்கள் ரொக்கமாக மட்டுமே விற்கப்படும். இனிமேல் கடனுக்கு பொருட்கள் கொடுக்கப்படாது.
பழைய பாக்கி உள்ளவர்கள், கடனை அடைத்தப் பிறகு பொருட்கள் வாங்க அனுமதி உண்டு.
மன்னிக்கவும்.
நன்றி.
கிருஷ்ணா
இந்த அறிக்கையைப் பார்த்த தோட்டத்து மக்கள் அதிர்ச்சியுற்றனர். சிலர் பரிதாபப்பட்டனர். சின்னப் பையன் எப்படி வியாபாரம் செய்யப் போகிறான் என்றும் பேசிக் கொண்டனர்.
திங்கட்கிழமை கிருஷ்ணன் கடையைத் திறந்தான். என்னதான் கடையை அதிகாலையிலேயே அவன் திறந்தாலும், யாரும் அவன் கடைப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கிருஷ்ணன் வருத்தமடைந்தான். பதினோன்று மணியளவில் கடைப் பின்னால் இருக்கும் தன் வீட்டிற்குச் சென்று தனக்கு தெரிந்ததை சமைத்து வைத்தான். ஒன்றரை மணியளவில் தன் தம்பியும் தங்கையும் பள்ளியிலிருந்து வந்து விடுவார்கள்.
சமைத்து முடித்தப் பின் மீண்டும் கடையைத் திறந்தான்.
முதல் முதலாக காமாட்சி பாட்டி வந்தார். ஒரு சிறிய சார்டின் டின்னை வாங்கிச் சென்றார், ரொக்கமாக. கிருஷ்ணனுக்கு ஒரே குஷி. அதன் பிறகு சில இளைஞர்கள் சிகரேட் வாங்கிச் சென்றனர். கை காசு கொடுத்துதான் வாங்கினர். மேலும் சந்தோசம் அடைந்தான். சிலர் பொருட்களை கடனுக்கு கேட்டனர். அவர்களை திருப்பியனுப்பி விட்டான்.
மறு மாதம், முதல் வாரத்தில் பல வாடிக்கையாளர்கள் கடனை அடைத்தனர். கிருஷ்ணன் துள்ளிக் குதிக்காத குறைதான்.
ஏறக்குறைய மூன்று மாதங்களில் பெரும்பாலோர் தத்தம் கடன்களை அடைத்து விட்டனர். அந்த பணத்தைக் கொண்டு ஏஜெண்டுகளின் கடன்களை அடைத்தான். இப்போதுதான் கிருஷ்ணன் முழு நிம்மதி அடைந்தான்.
தோட்டத்து மக்கள் கிருஷ்ணனை ‘புது முதலாளி’ என்று அழைக்கத் தொடங்கினர். அது அவனுக்கு பிடித்திருந்தது. அதில் கிண்டலும் நக்கலும் கலந்திருந்தாலும் அவனுக்கு பிடித்திருந்தது.
என்னதான் அவன் சந்தோசமாக இருந்தாலும், கடையில் வருமானம் மிகவும் குறைவாக கிடைத்தன. அவன் அப்பா பெரும்பாலான பொருட்களின் விலையை குறைந்த லாபத்திற்கே விற்று வந்துள்ளார். ஒரு ஆகச் சிறிய சார்டின் டின் 10 காசுக்கு மட்டுமே இலாபம் பெற முடிந்தது. இந்த மாதிரியே போய்க் கொண்டிருந்தால் பணக்காரனாக வழி இல்லை என்று நன்கு அறிந்து ...
முழுக் கதையை தொடர்ந்து வாசிக்க எனது ‘தலைவர்’ சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படிக்க மறவாதீர்கள்.
புத்தகத்தின் விலை RM18 மட்டுமே (தபால் செலவு உட்பட)
தொடர்பு எண்கள் : 016 9612085


Comments
Post a Comment