Skip to main content

தேசிய மொழியில் சிறந்து விளங்க வழிமுறைகள்

 கட்டுரை

 



 

 

எம். பிரபு

 

நமது நாட்டில் இந்திய மாணவர்கள் பல மொழிசார்ந்த கல்வியை அவசியமாகப் பயில வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எந்த வகையான மொழிசார்ந்த பள்ளிக்கூடத்திற்கும் பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப பிள்ளைகளை அனுப்பலாம்.

தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதே சிறந்தது என்பதே அனைவரது விருப்பமாக இருந்தாலும், அது நடைமுறையில் எப்போதும் சாத்தியமானதாக இருப்பதில்லை. மூலைக்கு மூலை மற்ற மொழிப் பள்ளிகள் இருப்பது போல் தமிழ்ப் பள்ளிகளும் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஒருவருக்குத் தன் தாய் மொழி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தமது தேசிய மொழியும் இந்நாட்டில் மிக முக்கியமானதாகும். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரு குடிமகனுக்கு, தன் நாட்டின் மொழியைச் சரிவர பேசவும் எழுதவும் தெரியாவிட்டால், அதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒரு மாணவர் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவன் அல்லது அவள் நிச்சயமாக தேசிய மொழியில் எழுதவும் பேசவும் புலமை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ பிறந்த ஒரு குழந்தை அங்குள்ள ஆங்கில மொழியைத்தான் தன் முதன்மையான மொழியாகக் கருதும். அதன் பின்னரே பிற மொழிகள் அனைத்தும். காரணம், ஆங்கிலமே அந்நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாகும்.

அதேபோல் நமது இந்திய மாணவர்களும் தேசிய மொழியை தமது சொந்த மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இந்நாட்டில் பிறந்ததற்கான முழுப் பயனை பெற்றதாகக் கூற முடியும்.

ஒரு மாணவர் தேசியப் பள்ளியில் பயின்றால்தான் தேசிய மொழியில் சிறந்து விளங்க முடியும் என்பது தவறான கருத்தாகும். எந்த மொழிப் பள்ளியில் பயின்றாலும், ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், எவ்வாறாயினும் அந்த மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற முடியும். எல்லாவற்றிற்கும் முயற்சி அவசியம். அதேபோல், மலாய் மாணவர்கள் அனைவரும் தேசிய மொழியில் புலமை பெற்றவர்களே என்றும் சொல்ல முடியாது.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தேசிய மொழியைப் பயிலுவதில் சற்று சிரமம் அடைகிறார்கள் என்ற கூற்று உண்மைதான். ஆனால் அந்தச் சிரமத்தைப் போக்க வழி தேடி செயலாற்ற வேண்டுமே தவிர, அதை மட்டும் பிடித்துக்கொண்டு குறை கூறிக் கொண்டிருந்தால் பயன் இல்லை.

முன்னர் நான் எழுதிய கட்டுரைகளிலும் குறிப்பிட்டதுபோல், ஒரு மாணவன் அல்லது மாணவி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு முழுக் காரணமும் பெற்றோர்களே. பெற்றோர் எந்த வகையில் தங்கள் பிள்ளைகளை வழிநடத்துகிறார்களோ, அதேபோல அவர்களின் வருங்கால வாழ்க்கையும் அமையும்.

இங்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வழிநடத்தினாலே போதுமானது.

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பே தேசிய மொழி சார்ந்த கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, அவர்களுடன் பெற்றோர் அமர்ந்து படிக்க வேண்டும். 

லாய் மொழி பேசும் அண்டை அயலார் சிறுவர்களுடன் பழக அனுமதிக்க வேண்டும்.

மலாய் மக்களின் கலை, கலாச்சார மற்றும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைத்துச் செல்ல வேண்டும். 

வாரத்திற்கு ஒரு முறையாவது நூலகத்திற்கு அழைத்துச் சென்று, பல மணி நேரம் அங்கு பலவகை புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கலாம். அங்கிருந்து புத்தகங்களை இரவலாக வாங்கியும் வரலாம். 

படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டிலுள்ளவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கருத்துப் பரிமாற்றம் நடத்தலாம். 

படித்த புத்தகங்களின் விவரங்களை நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். பிற்காலத்தில் கட்டுரை எழுதுவதற்கு அந்தக் குறிப்புகள் பெரிதும் உதவும். 

தேசிய மொழி புத்தகங்கள் படிப்பதோடு மட்டும் நிற்காமல், தொலைக்காட்சியிலும் யூடியூப்பிலும் ஒளிபரப்பாகும் மலாய் செய்திகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதும் கேட்பதும் மூலம் பிள்ளைகளின் பேச்சுத் திறன் மேலும் மேம்படும். 

பிறருடன் கூச்சமின்றி தேசிய மொழியில் உரையாட வேண்டும். தவறாகப் பேசினால் திருத்திக் கொள்ளவும், திருத்தம் செய்யவும் பழக வேண்டும். 

அதோடு, இந்திய எழுத்தாளர்கள் தேசிய மொழியில் எழுதிய படைப்புகளையும் மாணவர்கள் வாசிக்க வேண்டும். KAVYAN அமைப்பு இதற்காக அதிக முயற்சிகள் மேற்கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை வாங்கி ஆதரவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களையும் எழுத உற்சாகப்படுத்தலாம்.

இந்திய எழுத்தாளர்கள் தேசிய மொழியில் எழுதிய படைப்புகள்
https://ekavyan.blogspot.com என்ற இணையதளத்திலும் நிறைய உள்ளன. அங்கும் வாசிக்கலாம்.

ஆக, தேசிய மொழியை சரளமாக எழுதவும் பேசவும் பல வழிகள் உள்ளன என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். உழைப்பு இல்லாமல் எதுவும் கிடைக்காது.

KAVYAN வெளியீடு செய்த புத்தகங்களைப் பெற விரும்புவோர், கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். புத்தகங்களின் தலைப்புகள் மற்றும் விலைப்பட்டியல் வழங்கப்படும்.

 016 9612085    -  எம். மகேந்திரன்

 011 11411952   -  உதய சங்கர் எஸ். பி

 


Comments

Popular posts from this blog

Daris, Pelukis Cilik

  Bakat                                                               Oleh: M. Mahendran   Bukan semua orang dianugerahkan bakat melukis. Kajian menunjukkan dalam 100 orang cuma 10 hingga 20 orang sahaja menunjukkan minat atau memiliki bakat semula jadi dalam melukis tanpa latihan formal. Kira-kira 1 hingga 5 orang daripada 100 akan mempunyai kemahiran tinggi atau bakat melukis dengan tahap profesional jika mereka berlatih dengan serius. Adik Muhamad Daris Aryan Bin Saiful Bahri merupakan pelajar tahun 4 di SK Sulaiman, Bentong, Pahang.  Minat  Daris  terhadap seni lukisan berputik sejak umur 6 tahun. Saya   berjiran dengan keluarga adik Daris, mengenalinya sejak bayi lagi. Lukisan-lukisannya sering dipaparkan di Facebook oleh ibu nya Puan Diana dan  bapanya  Encik Saiful Bahri . Saya terpegun m...

தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாதவர்களின் தமிழ்

  கட்டுரை     எம். பிரபு     மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ஆரம்பக் கல்விக்கூடங்கள் ,   பல மொழிப் பிரிவுகளில் நாடு தழுவிய நிலையில் தொடங்கப்பட்டிருந்தன. ஆங்கிலம் ,   மலாய் ,   தமிழ் ,   சீனப்பள்ளிகள் அந்தந்த இடங்களில்   இனவாரியாக   மக்கட்தொகையை   அடிப்படையாகக் கொண்டுத் தொடங்கப்பட்டதாகும். எப்போது எங்கு என்று ஆராய்ந்து இதைப் பற்றி எழுதினால்,   கட்டுரை நீண்டுக் கொண்டே போகும். இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்பவே எழுத முயற்சிக்கின்றேன். எது எப்படியோ இந்தியர்கள் அந்தக்காலத்திலியே தமிழ்ப் பள்ளி,   ஆங்கிலப் பள்ளி   பிறகு மலாய்ப்பள்ளி (தேசியப் பள்ளி)     அதனைத் தொடர்ந்து அண்மையக் காலமாக சீனப் பள்ளிகளிலும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். தமிழ்,   ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக்   காட்டிலும் மெண்டரின் மொழிப் பயின்றவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் ,   இந்தியர்கள்  சீனப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பதிந்து வருகின்றனர். அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் , ...

குருவே சரணம்

            சிறுகதை                                                               எம். பிரபு       தமிழ்ச்செல்விக்கு பிடிக்கவில்லை, எனக்கும் பிடிக்கவில்லை. பல மாதங்களாக போராடி வந்த நான், தோற்று விட்டேன். தோற்றுப் போனது அவர்கள் முன்னால் நானாக இருக்கலாம், ஆனால் என் உள்ளம் தோற்கவில்லை. என் உள்ளம் இன்னமும் போராடிக் கொண்டுதான் உள்ளது. அதற்கான சரியான தருணம் இதுவரையில் அமையவில்லை. இனியும் அமையுமா என்று எனக்கும் தெரியவில்லை. அமைந்தால் நல்லதே. “ நீங்க போங்க , நான் வரல, ” நேற்றிலிருந்து நான் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். “ நான் மட்டும் எப்படி போவது ?   எல்லாரும் உன்னை விசாரிப்பாங்களே ? ”   அவர் நல்ல உடை உடுத்திக் கிளம்ப ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார். “ உங்களுக்கு பிடிக்கும்னா போயிட்டு வாங்க ,   ஏன் என்னை கூப்பிடுறீங்க ? ”   நான் குசினியில் கூட்டிக்கொண்டே கூறினேன். “ நம்மல க...