Skip to main content

வாருங்கள் புத்தகம் வாசிப்போம்!

 கட்டுரை


                                



எம். பிரபு

 

கடந்த சில ஆண்டுகளாக, நம் நாட்டில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கான காரணங்களை நாமும் நன்றாகவே அறிவோம்.

 

தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூறியதன்படி, மலேசிய தேசிய நூலகம் நடத்திய ஆய்வில் 57.7% மலேசியர்கள் வாசிப்பை விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுளது. ஆனால் அவர்கள் உண்மையிலேயே புத்தகங்களைப் படிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

 

எனது பார்வையில், நம்மிடம் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை. சிறியவயதிலிருந்து எழுத்துக்களை கற்றுக்கொள்கின்றோம், ஆனால் வயது ஆக ஆக கற்றுக் கொண்டதை புறக்கணிக்கின்றோம். தண்டத்திற்குத்தானே பள்ளியில் அத்தனை வருடங்கள் பள்ளியில் பயின்றோம்?

 

மாற்றம் தேவை!

மலேசியர்கள் வாசிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு குடிமகனும், குழந்தை பருவத்திலிருந்தே புத்தகங்களை நேசிக்க வேண்டும். ஆனால் உண்மையில், நம் நாட்டில் வாசிப்புக்கு ஊக்கம் தரும் சூழ்நிலை முறையானதாய் அமையவில்லை.

 

பல வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்கவேண்டும், தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பார்கள். இது ஒரு பெரிய குறை. உணவு உட்கொள்வது போலவே, வாழ்க்கையிலும் பாடப்புத்தகங்களோடு சுய வாசிப்பும் தேவை.

 

பெற்றோர்களின் பங்கு.

பெற்றோர்களே புத்தகம் வாசிப்பதில்லை என்றால், அவர்களது பிள்ளைகளிடத்தில் வாசிப்புப் பழக்கம் எப்படி உருவாகும்? வாசிப்பு ஒரு பழக்கம் மட்டுமல்ல, அது ஒரு பாரம்பரியமாகவும் இருக்க வேண்டும்.

 

நம் முன்னோர்கள் எழுத படிக்கத் தெரியாத காலம் வேறு, இப்போது பலரும் கல்வியறிவு பெற்றுள்ளனர். எனவே, இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

 

தடைகள் மற்றும் தீர்வுகள்

நான் வாராந்திர வாசிப்பு மற்றும் எழுத்து வகுப்பு நடத்தும் போது, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாசிப்பதற்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதில்லை என்பது தெரிய வருகின்றது. பள்ளி நூலகத்திலும் மாணவர்கள் புத்தகம் வாங்கி வாசிப்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைப் பற்றி மாணவர்களிடத்தில் கலந்தாலோசித்தப் போது பல கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்.

 

1. பள்ளியில் மாதந்தோறும் வாசிப்பு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதிகமாக வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம். படிக்கத் தவறிய  மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம்.

 

2. பெற்றோர்களுக்கு வாசிப்பின் நன்மைகள் குறித்து பள்ளியில் விளக்கங்கள் வழங்க வேண்டும்.

 

3. மாவட்ட நூலகங்களில் பெரியவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.

 

4. பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். அவர்களும் வாங்கிக் கொள்ளலாம், தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் குடும்பமாக சேர்ந்து வாசிப்பதற்கான சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

 

5. ஒவ்வொரு நகரிலும் ‘ரஹ்மாட் புத்தகக் கடைகள்’ அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

6. எல்லா வீடுகளிலும் புத்தகங்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் இருக்க வேண்டும் என அரசு உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் தண்டனை வழங்க வேண்டியது அவசியமாகும்.

 

7. உள்ளூர் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இணைந்து பல மொழிகளில் புத்தகங்களை உருவாக்குதல்.

 

8. எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கும் நிகழ்வுகள் பள்ளிகளில், நூலகங்களில், புத்தகக் கடைகளிலும் பெரிதளவில் நடத்தப்பட வேண்டும்.

 

9. புத்தக தொழிற்துறை உருவாக்கம் பெற அரசாங்கம் ஆதரவு அளிக்க வேண்டும். புத்தகக் கடைகள் உணவகங்களை விட ஆங்காங்கு  சிறப்பாக இயங்க வேண்டும்.

 

10. முக்கியாமாக சமூக ஊடகப் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த யோசனைகள் அனைத்தும் ஒரு நாள் நிச்சயமாக நடைமுறையில் வரும் என நம்புவோம். இது வற்புறுத்தலாக இருந்தாலும் சரி, நல்லதிற்காக நாம் செய்வது நன்மைதானே?

 

வாசிப்போம்! வளர்வோம்!

Jom baca buku!


                                      


Comments

Popular posts from this blog

Daris, Pelukis Cilik

  Bakat                                                               Oleh: M. Mahendran   Bukan semua orang dianugerahkan bakat melukis. Kajian menunjukkan dalam 100 orang cuma 10 hingga 20 orang sahaja menunjukkan minat atau memiliki bakat semula jadi dalam melukis tanpa latihan formal. Kira-kira 1 hingga 5 orang daripada 100 akan mempunyai kemahiran tinggi atau bakat melukis dengan tahap profesional jika mereka berlatih dengan serius. Adik Muhamad Daris Aryan Bin Saiful Bahri merupakan pelajar tahun 4 di SK Sulaiman, Bentong, Pahang.  Minat  Daris  terhadap seni lukisan berputik sejak umur 6 tahun. Saya   berjiran dengan keluarga adik Daris, mengenalinya sejak bayi lagi. Lukisan-lukisannya sering dipaparkan di Facebook oleh ibu nya Puan Diana dan  bapanya  Encik Saiful Bahri . Saya terpegun m...

நான் எனும் பெரும் நடிகன்

    சிறுகதை    எம். பிரபு   எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கும் அவர்களைப் பிடிக்காமல் இருக்குமா பின்னே. நான் வாழ்வதே அவர்களுக்காகத்தான். அவர்கள் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவர்கள் இல்லை. வாழ்க்கையை இப்படித்தான் அனுபவிக்கனும் என்று எழுதி வைத்திருந்தால் நான் என்ன செய்வது? எது நடக்க வேண்டுமோ அது நடந்துதானே ஆக வேண்டும். எனக்கு எப்போதுமே அந்த கர்வம் உண்டு. நான் மிகவும் நல்லவன். யாரும் என்னை கெட்டவன் என்று சொன்னதில்லை. சொல்லி இருக்கலாம். அதெல்லாம் பெரிய விசயமே அல்ல.   அறவே இல்லை?   தெரியாது.   அவர்களை எனக்குப் பிடிக்க காரணம் உண்டு. அவர்களுக்கும் என்னைப் பிடிக்க நிச்சயம் காரணம் இருக்கும். அதுக்காக எனக்கு அவர்களை வெறுமனே பிடிக்கும் என்று அர்த்தமாகி விடாது. அது போன்றுதான் அவர்களும். சும்மாவா அவர்களுக்கு என்னைப் பிடிக்கும்? நான் என்ன சினிமா நடினா? இருந்தாலும் நான் ஒரு தலைச் சிறந்த நடிகனே. அவர்கள் மட்டும் என்னவாம். எல்லோரும் நடித்துக் கொண்டுதான் உள்ளனர். சும்மாவா சொன்னார் ஷேக்ஸ்பியர்.   வாழ்க்கையில் நடிக்கும் நடிகனுக்கு,  சினிமாவில் ...

தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாதவர்களின் தமிழ்

  கட்டுரை     எம். பிரபு     மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ஆரம்பக் கல்விக்கூடங்கள் ,   பல மொழிப் பிரிவுகளில் நாடு தழுவிய நிலையில் தொடங்கப்பட்டிருந்தன. ஆங்கிலம் ,   மலாய் ,   தமிழ் ,   சீனப்பள்ளிகள் அந்தந்த இடங்களில்   இனவாரியாக   மக்கட்தொகையை   அடிப்படையாகக் கொண்டுத் தொடங்கப்பட்டதாகும். எப்போது எங்கு என்று ஆராய்ந்து இதைப் பற்றி எழுதினால்,   கட்டுரை நீண்டுக் கொண்டே போகும். இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்பவே எழுத முயற்சிக்கின்றேன். எது எப்படியோ இந்தியர்கள் அந்தக்காலத்திலியே தமிழ்ப் பள்ளி,   ஆங்கிலப் பள்ளி   பிறகு மலாய்ப்பள்ளி (தேசியப் பள்ளி)     அதனைத் தொடர்ந்து அண்மையக் காலமாக சீனப் பள்ளிகளிலும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். தமிழ்,   ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக்   காட்டிலும் மெண்டரின் மொழிப் பயின்றவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் ,   இந்தியர்கள்  சீனப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பதிந்து வருகின்றனர். அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் , ...