Skip to main content

Posts

Showing posts from September, 2025

கடைசியாகக் காணப்பட்டது

    சிறுகதை    எம். பிரபு   இன்று காலையும் எப்போதும் போல புலனத்தில் காலை வணக்கம் தகவல் போட்டப் பிறகு அப்பா பேசினார், நானும் பேசினேன். “ இந்த மாசம் எப்போ வீட்டுக்கு வர்றே ?” “ இன்னும் சரியா தெரியலப்பா.” “ மத்தவங்களுக்கு எல்லாம் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கொடுக்கிறாங்க ; உனக்கு மட்டும் ஏன் விடுப்பு கிடையாது ?” “ என் வேலை மத்தவங்க மாதிரி இல்லப்பா.” “ நல்லா சம்பளம் கொடுத்தா மட்டும் போதுமா ? விடுப்பெல்லாம் ஒழுங்குமுறையா கொடுக்குறது இல்லையா ? நீயும் உன் வேலையும்! சரி , வரப்ப திடுதிப்புன்னு வந்து நிக்காதே. ஒழுங்கா ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டு வா!” “ என் வேலை எப்போ ஆரம்பிக்கும் , எப்போ முடியும் என்று தெரியாதுப்பா.” “ நல்லா படிச்சிருந்தும் ஏன்தான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தியோ ? மேல் படிப்பு படிக்கச் சொன்னா அதுவும் செய்யல. சரி... சரி , எனக்கு சமைக்கிற வேலை இருக்கு. நான் போனை வெச்சிடுறேன்.”   அப்பாவுக்கு நான் ஆசிரியர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது கனவு. என் தாயார் தமிழ்ப் பள்ளி ஆசிரியையாக இருந்ததால் அந்த ஆசை அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப...

PAKSAAN DEMI PAKSAAN

  Esei                                             M.  Mahendran     Dalam kehidupan seharian, kita sering menghadapi pelbagai situasi yang tidak menyenangkan. Ia  sudah bermula sejak alam bayi lagi. Apabila seorang bayi tidak lapar atau dahaga disumbatkan botol susu ke dalam mulutnya; bayi itu akan menunjukkan protes dengan menangis dan meraung. Ini bererti, apa yang dilakukan terhadap bayi itu adalah suatu paksaan. Perkara yang tidak digemari oleh seseorang, tidak harusnya dipaksa untuk membuat mereka menerimanya. Ini bukan sifat perikemanusiaan. Ia akan mengundang masalah psikologi kepada individu tersebut. Sebagai contoh, saya tidak gemar minum kopi, walau apa jenis kopi pun. Tetapi kawan saya pula adalah penggemar tegar. Dia akan mencadangkan beberapa jenis kopi. Saya akan mengelak. Setiap kali dia akan menceritakan kehebatan rasa kopi dan khasiatny...

சினிமாவும் நானும் (2)

  அனுபவம்                         எம். பிரபு   குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கும் பழக்கம் தொடர்ந்து இருந்தது. அதுபோலவே   நான் தனியாகவும் அடிக்கடி திரைப்படம் பார்த்தேன். சில நேரங்களில் பெற்றோ ருக்குத் தெரியும் , சில நேரங்களில் தெரியாமலும் பார்த்தேன். நான் தனியாக பார்த்த படங்கள் பெரும்பாலும் மலாய் , ஆங்கிலம் மற்றும் கென்தோனிஸ் படங்களாக இருந்தன. என்னனுடைய 11   வயதில்  ( 1979) முதன்முதலில் தனியாக படம் பார்க்கத் தொடங்கினேன். பார்த்த முதல்   படம் SUMBER ILHAMKU.                                              அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித் திருந்ததால் ,   மலாய் படங்களை அதிகம் விரும்பத் தொடங்கினேன்.   CERITAKU CERITAMU ,  ADIK MANJA ,  JEJAK BERTAPAK , ESOK MASIH ADA, ANAK TUNGGAL , TUAN BADOL  போன்ற பல படங்களை 1980  வரை பார்த்தேன்.   பிறகு இடைநிலைப் பள்ள...