Skip to main content

Posts

மலேசியாவின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில்

  கட்டுரை     எம். பிரபு 11 மற்றும் 12 ஜனவரி 2026 தொடங்கி  எல்லா மாணவர்களும் மீண்டும் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள். அடுத்த ஆண்டில் பழையபடி ஜனவரி முதல் வாரத்திலேயே பள்ளிகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம் நவம்பர் மாத நடுவிலேயே பள்ளி விடுமுறை விடப்பட்டு , டிசம்பர் இறுதி வரை அது தொடர்ந்தது. ஆனால் தற்போது பெருநாள் காலங்களில் அதிகப்படியான விடுமுறை வழங்கப்படுவதால் , இறுதி தவணை விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே , பெருநாள் கால விடுமுறைகளை குறைப்பது மிகவும் அவசியமாகிறது. முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டது. ஹரி ராயா மற்றும் சீனப் பெருநாட்களுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை இருந்தது. இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு வர வேண்டும். இந்த ஆண்டிலிருந்து நம் மாணவர்கள் 100% உருமாற்றம் பெற வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறோம். கடந்த காலச் சம்பவங்கள் பலவும் கசப்பான அனுபவங்களாக இருந்தன. அவை இனி தொடராமல் இருக்க பலவிதமான முன்முயற்சிகள் அவசியம். மாணவர்கள் முழு மனதோடு விரும்பிப் பள்ளிக்குச் செல்ல , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசாங்கமும் ம...

குப்பைகளைப் போடாதீர்!

  கட்டுரை     எம். பிரபு   வெளியிடங்களுக்குச் சென்றால்,   நம்மில் பெரும்பாலோர் குப்பைகளைக் குப்பைத் தொட்டியைத் தவிர்த்துக் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளைப் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். பொது இடமும் நம் சொந்த வீடும் ஒன்று என்ற மனம் ஏற்றுக் கொள்ளாததால் வந்த வினை இது. சிறு துண்டு காகிதமானாலும் அதைக் கீழே வீசினால்,  அது குப்பையே! இதுகூட புரியாதவர்களாக இன்னமும் மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்து வருவது மிகவும் அதிசயமே. அதுவும் நம் நாட்டு மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எங்கே     DILARANG MEMBUANG SAMPAH DI SINI !     என்று எழுதி ஒட்டியிருக்குமோ, அங்குதான் குப்பைகளைக் கொட்டி விட்டு மறு வேலைப் பார்ப்பார்கள். இந்த வருடம் ‘ மலேசியாவிற்கு வருகை தாருங்கள் ’   ஆண்டாகும். அதனால்தான்   இந்த   2026ம்   வருடம் மலேசியாவில் பல புதிய சட்டங்கள் அமலாக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான சட்டத்திட்டங்கள் நாட்டு மக்களை சிரமப்படுத்துவது போன்றுத் தோற்றமளித்தாலும் ,   சற்றுக் கூர்ந்துக் கவனித்தால் , எல்லாம்   நன்மைக்கே என்று புரியவரும். அ...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...