கட்டுரை எம். பிரபு நாம் இந்த நாட்டின் மக்க ளாக பல நூற்றாண்டுகளாக அமைதியாகவும் வளமாகவும் வாழ்ந்து வருகிறோம். பல சிரமங்களையும் பிரச்சினைகளையும் நாம் ஒன்றாக எதிர்கொண்டு , மக்களும் நா டும் நலமாக இருக்க முயன்றிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல இன மக்களின் ஒத்துழைப்பால் தான் நாம் மாற்றங்களை க ண்டு வருகின்றோம். ஒரு காலத்தில் இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களையும் ஒன்றிணைப்பது கடினமான விசயமாகப் படவில்லை . அந்த நெருக்கமான உறவினால்தான் மலாய் மொழி பிற மொழிகளையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றோடொன்று கலந்துள்ளன. ஆனால் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் பல இன மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் பதிவுகளை நாம் அடிக்கடி பார்க்கி ன் றோம். இந்த இன , மத மற்றும் கலாசார உணர்வுகளை காயப்படுத்தும் மக்கள் வெளிநாட்டவர்கள் அல்ல ; நம் நாட்டில் பிறந்தவர்களே. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அபாயமும் கூட. மலேசியா ஒரு இன மக்களுக்கு மட்டும் சொந்தமான புதிய நாடு அல்ல. இங்கு பிறந்த அனைவருக்கும் இந்த நாடு...